போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளுடன் எல்லயில் இருவர் கைது

எரிபொருள் நிலையமொன்றில் போலி ஐயாயிரம் ரூபா நோட்டினைக் கொடுத்த இரு இளைஞர்களை,எல்ல பொலிஸார் இன்று (24) கைது செய்துள்ளனர்.

எல்ல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஹெலஹல்ப்பே எரிபொருள் நிலையத்தில், மோட்டார் சைக்கிளொன்றிற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டு, அம் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் தம்மிடமிருந்த ஐயாயிரம் ரூபா நோட்டினை எரிபொருள் நிலையத்திற்கு வழங்கினர்.

பணத்தை பெற்ற எரிபொருள் நிலையத்தினர், அந் நோட்டில் மாற்றமொன்றினைக் கண்டு,அது குறித்து எல்ல பொலிஸாருக்கு அறிவித்தனர். உடனடியாக அங்குவிரைந்த பொலிசார் பணநோட்டினைப ரிசீலனைசெய்தபோது, அப் பணநோட்டுபோலிநோட்டென்பதைஉறுதிப்படுத்தி, அந் நோட்டினைவழங்கிய இரு இளைஞர்களையும் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இவ்விருவரும்,விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,எல்லபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிஏ.கே.எம். அலகியவன்ன தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles