மடுல்சீமை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவரும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மடுல்சீமை பட்டவத்தை பகுதியில் யுவதியொருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்களும், தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மடுல்சீமை கல்லுள்ள பகுதியில் 46 வயதுடைய பெண் ஒருவருக்கும், 11 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கொரோனா இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் தனிமைப் படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருவதோடு இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விருவரும் தாயும் மகளும் என்பதோடு தாய் மெட்டிகாத்தன்ன பகுதியில் குடும்ப நல உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா
