இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் கெலின்கந்த கொலனி அகலவத்தை என்ற முகவரியில் வசிக்கும் பி.எச்.டி.தில்ஷான் என்ற16 வயதுடைய பாடசாலை மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்துகம டிப்போவிற்குச் சொந்தமான பஸ் கெலிங்கந்தவிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்ததாகவும், மகேலி எல்ல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த அணையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
