மத்திய மாகாணத்தில் இதுவரை 7,597 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 7 ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 1,163 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 5,275 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில்  1,159 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 31,188 பேருக்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles