மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது என்று மாகாண சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 177 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில 100 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 100 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் நிகால் விரசுரிய தெரிவித்தார்.
” முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்லவேண்டாம். சமூகஇடைவெளியை பின்பற்றுதல், கைகளை முறையாக கழுவுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் அவர் கூறினார்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்