கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்த ஏற்பாடுகளை மீறி இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பங்குதாரர்கள் நீதிமன்றத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
அந்த மனு கட்டணமின்றி தள்ளுபடி செய்யப்பட்டது.
காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிராஸ் குணரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
