மனோவின் கருத்துக்கு எதிராக பொன்சேகா போர்க்கொடி!

“மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது. புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அவ்வமைப்பினர் தனி நாட்டை உருவாக்கவே போராடினர்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், போரினால் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

Related Articles

Latest Articles