மமமுவின் தலைமைப்பதவியில் மாற்றம்? அவசரமாக கூடுகிறது தேசிய சபை

மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் விசேட கலந்துரையாடலொன்று தலவாக்கலையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள உள்ளுராட்சிமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தை உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இறுதி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக ஜவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக முன்னணியின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மலையக தொழிலாளர் முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் புதியவர்வ ளை இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்ட நிலையில் இது தொடர்பில் ஒரு வாரத்தில் தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் மலையக மக்கள் முன்னணி எவ்வாறு செயற்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மலையக மக்கள் முன்னணியில் புதியவர்கள் பலர் இணைந்து கொள்வதற்கு தற்பொழது கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பாக இறுதி தீர்மானம் மிக விரைவில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்திலும் , செயலாளர் பதவியிலும் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த மாற்றங்கள் தொடர்பாக இரண்டு வாரங்களில் தேசிய சபையில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் முன்னணியின் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால செயற்பாடுகளில் மலையக மக்கள் முன்னணி புதிய மாற்றத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படுவள்ளதாகவும் அதற்கான எந்த விட்டுக் கொடுப்பையும் தான் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இங்கு குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles