மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட கலவரத்தால் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என்று ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று (29) மாலை அமைதியின்மை ஏற்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் களனி மற்றும் ராகம பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் குழுக்களும் அழைக்கப்பட்டிருந்தன. சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.