உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று அமெரிக்க பிரதிநிதிகளிடம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டி, (Victoria Nuland) சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவர்களை ஒன்றாக சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புளொட் தலைவர் சித்தார்த்தன, முகா தலைவர் ஹக்கீம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போதே தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் உறுதியளித்தார் என அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர், சிறுபான்மை மக்களின் அரசியல் தலைவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
காணிப்பிரச்சினை, அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.