முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்று அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
ஐ.பி.எல். போட்டித் தொடர் நடந்து வரும் நிலையில், அவர் இந்தியாவிலேயே தற்போது இருப்பதாகவும், வழமையான மருத்துவ பரிசோதனைக்கு அவர் சென்று திரும்பியதாகவும் குறித்த குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
இதயம் தொடர்பிலான சிகிச்சைகளுக்காக முத்தையா முரளிதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேட்டுபோது, இந்த செய்தி முற்றிலும் பொய்யாது என்று குறித்த குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் தங்கியுள்ளார். நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles