முன்னாள் முதல்வருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது உறவினரான ஷாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவர்களுக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பிலேயே அவர்களுக்கு இன்று மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவின் தம்பியே எஸ்.எம். ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles