‘மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் சஜித் அணியுடன் சங்கமம்’

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் விரைவில் தமது அணியுடன் இணையவுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ஐக்கிய மக்கள் சக்தியானது பாரிய அரசியல் கூட்டணியாக செயற்படவுள்ளது. எமது கூட்டணியில் கட்சிகள், அமைப்புகள் இணையலாம். அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. ஆனால் எமது கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலரும் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர்.” – எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles