ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் நிலை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வருடம் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே ரஞ்சனின் எம்.பி. பதவியும் இல்லாமல் போகலாம் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி ரஞ்சன் ராமநாயக்கவின் இடத்துக்கு, கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.