லங்கா பிரிமியர் லீக் ஆகஸ்ட் 28 இல் ஆரம்பம்!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தம்புள்ள, கண்டி மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள சர்வதேச மைதானங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

20 -20 குறித்த போட்டி தொடரில்  5 அணிகள் பங்கேற்கவுள்ளன.  கொழும்பு, தம்புள்ளை, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் என அணிகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களும் அணிகளில் இடம்பெறவுள்ளனர்.

Related Articles

Latest Articles