இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக லசந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட லசந்த விக்ரமசிங்க இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்