வடமாகாணத்திற்கான வலையமைப்பு மேம்பாட்டை Airtel நிறைவு செய்துள்ளது

• அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய 900 MHz ஒலி அலைக்கற்றையை பயன்படுத்துகிறது

• பரீட்சார்த்த சோதனைகளின் போது ஒப்பிட முடியாத உள்ளக அனுபவங்களை உறுதிபடுத்துகின்றன

இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனமான எயார்டெல் லங்கா,

வடமாகாணம் முழுவதும் பாவனையாளர் அனுபவத்தை துரிதமாக மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு 900 MHz ஒலி

அலைக்கற்றை இலக்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய ஒலி அலைக்கற்றையை (Spectrum) பயன்படுத்துவது மேம்பட்ட வலையமைப்பு அனுபவத்தை பாவனையாளர்களுக்கு

ஏற்படுத்துவதோடு, அதனூடாக புவியியல் ரீதியாக விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட வட மாகாணத்திலுள்ள மக்களுக்கு
முழுமையான தொலைத்தொடர்பு வலையமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க முடியுமென்பது விசேட விடயமாகும். இந்த

வலையமைப்பு மேம்பாடானது அந்த பகுதியில் Airtel 4G சேவைகளை எதிர்பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின் பிரதம் நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப்
பணிப்பாளருமான ஆஷீஷ் சந்திரா, “புதிய ஒலி அலைக்கற்றையை (Spectrum) பயன்படுத்தப்படுவது எமது வளர்ச்சி
மூலோபாயத்திற்கு முக்கியமானது. Spectrum சிறந்த உள்ளக அனுபவத்தை செயல்படுத்த சிறந்த சமிக்ஞை ஊடுருவலை
அனுமதிப்பதுடன் எமது அதிர்வெண் அலைவரிசைகள் மீதான திறனை விடுவிக்கிறது, இதன் மூலம் பிராந்தியத்தின் பாரிய
மக்கள் தொகையில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய எமக்கு உதவுகிறது.” என தெரிவித்தார்.

பாவனையாளர் அனுபவத்தை உச்ச அளவிற்கு கொண்டு செல்வதற்கு இந்த மேம்பாடுகளானது எயார்டெல் லங்காவினால்
முன்னெடுக்கப்பட்ட மிக முக்கிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் தொடர்பாக:

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம்
தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு
வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல்
நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா
தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு
சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை
பார்வையிடவும்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles