பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொப்டன் விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட பெறுபேறோடு பதினொரு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அத்தோடு பரீட்சைக்கு தோற்றிய ஏனைய அனைத்து மாணவர்களும் எதிர்பார்க்கப்படும் உரிய அடைவு மட்டத்திற்குரிய எழுபதுக்கு மேற்பட்ட புள்ளியைப்பெற்று புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இம்முறை வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் மாணவி புண்ணியமூர்த்தி அகல்யா 194 புள்ளிகளைப் பெற்று வரலாற்று சாதனையோடு பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவர்களையும் இவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நடராஜா புவனேஸ்வரனையும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
படத்தில் சித்தியடைந்த மாணவர்களும் அதிபர், ஆசிரியர்களை இங்கு காணலாம்.
வி.யுகேந்தினி (162), பி.அகல்யா (194), அதிபர். எஸ்.தியாகசுந்தரம், வகுப்பாசிரியர் நடராஜா புவனேஸ்வரன், டீ.தர்ஷாயினி (164), பி.ஜனப்ரியன் (159), ஜி. பதுஷன் (175), பி.கிஷான் (177), எஸ். சருஷிரக்ஷன்யா (169), பி.யஷ்வின் – (168), எம்.சந்தீபன் -(179), எம்.ஹரிபிரசஷாத் -( 186)
மலர்வேந்தன்