” வழமையான பரிசோதனைக்காகவே சம்பந்தன் ஐயா வைத்தியசாலையில் அனுமதி”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம், மருத்துவ கண்காணிப்புக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

” வழமையான பரிசோதனைக்காகவே ஐயா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்முறை மூன்று நாட்கள் கண்காணிப்பு இடம்பெற வேண்டும். அதனால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.” என சம்பந்தனின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles