விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – மொட்டு கட்சி அறிவிப்பு

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகிவருகின்றது.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்துக்கு விஜயதாச ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டார். அத்துடன், ராஜபக்சக்களின் செயற்பாடுகளையும் விமர்சித்தார். இவ்விவகாரம் தெற்கில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் இன்று அறிவித்தார்.

Related Articles

Latest Articles