விவசாய அமைச்சின் விசேட அறிவிப்பு

ஜூலை 6ஆம் திகதி தொடக்கம் விவசாய திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

யூரியா உரத்தை வினைத்திறனான முறையில் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட வேண்டியதன் காரணமாக இவ்வாறு ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாகவும் விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles