வெரலப்பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சிறப்பு சித்தி

பசறை கல்வி வலயத்தில் மடுல்சீமை வெரலப்பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை நான்கு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

ஆர்.யதுர்சிகா – 176 புள்ளிகளையும், சி.தில்ருக்சன் – 171 புள்ளிகளையும், சீ. மதுநிசா – 169 புள்ளிகளையும்,  யூ நிகிசா – 165 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு கற்பித்த வகுப்பாசிரியர்களான கே. சரவணபவன், ஆர். ரவிச்சந்திரன் மற்றும் அதிபர் ஏ. ரமேஸ் ஆகியோருக்கு மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Related Articles

Latest Articles