வெளிநாடுகளிலிருந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களைக் கைது செய்யக்கூடாது!

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்துவரும் புலம்பெயர் இலங்கையர்களைக் கைது செய்யக்கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்ட ஏதிலிக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது புலம்பெயர்வாழ் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்நாடு கட்டியெழுப்படாவிட்டால் இலங்கைக்கு விமோசனம் கிடையாது எனவும் கருதுகின்றனர். இலங்கைக்கு அதிகளவு முதலீடுகளை கொண்டுவருவதற்கு கனடாவாழ் முதலீட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்காக நேசக்கரம் நீட்டினாலும் ஒரு சிலரின் நடவடிக்கையால் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் வருகை தந்திருந்த ஏதிலி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் தகவல்களை பரப்பிவருகின்றனர்.

அரசாங்கம் அவ்வாறு கைது செய்யவில்லை. இது விடயத்தில் உடன் தலையிட்டுள்ளது. இதற்கமைய இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்ககூடாது என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தீய குணம் படைத்த – தீய நோக்கத்துடன் செயற்படும் அரசியல் சக்திகள் உள்ளன. அந்த தீய சக்திகளை சுத்தப்படுத்த வேண்டும்.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles