“10 பேர்ச் காணி உரிமையே நிரந்தரத் தீர்வு”

பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில், தோட்ட உரிமையாளரால் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (13/05/2026) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறித்த தோட்டம் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருவதால், அங்கு வீடு கட்டப்பட்டதாலேயே அது உடைக்கப்பட்டது என அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அப்பிரதேச மக்களுடன் உரையாடிய பிரதி அமைச்சர், இது போன்ற சம்பவங்கள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் காலங்காலமாக நடந்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்,

“இவ்வாறான அடக்குமுறைகள் நீண்டகாலமாக நடந்து வந்தாலும், தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே இவை வெளிச்சத்திற்கு வந்து மக்கள் மயப்படுத்தப்படுகின்றன.”

“எமது மக்கள் ஒரு தற்காலிக வீட்டை அமைப்பதற்கோ, மரங்களை நடுவதற்கோ, கழிப்பறைகளைக் கட்டுவதற்கோ அல்லது வாழ்வாதாரப் பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கோ கூட அனுமதியற்றவர்களாகவும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.”

“முறையான தீர்வுகள் இன்றி, மக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.”

இந்த விவகாரத்திற்குத் தற்போதைய சரியான தீர்வு, மக்களுக்குத் தலா 10 பேர்ச் காணியை வழங்கி, அதில் நிரந்தர வாழ்விடங்களை அமைப்பதேயாகும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்கான விரைவான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு முன்னெடுக்கும் என உறுதியளித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles