1000 ரூபாவுக்காக மல்லியப்பு சந்தியில் களமிறங்கும் திகா!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி ஹட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் , முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரமும் பங்கேற்கவுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக்கருத்திற்கொண்டு, தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கமையவே இப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles