“ மச்சான்,பாலித தெவரப்பெரும என்னை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாய், மேர்வின் சில்வாவையும் உன்னிடம் அழைத்துவருமாறு யமனிடம் கூறு, நானும் விரைவில் வருகின்றேன்…”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
அமரர் பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு உருக்கமாக கூறியுள்ளார்.
“ நானும், பாலித தெவரப்பெருமவும் ஒரு தாயின் பிள்ளைகள்போலவே பழகினோம். இந்நிலையில் என்னை தனிமைப்படுத்திவிட்டு அவர் சென்றுவிட்டார். சில திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் பாலித மச்சான் என்னை விட்டு சென்றுவிட்டார். உன்னை தேடி நானும் விரைவில் வருவேன். அதுவரை காத்திரு. அவ்வாறு காத்திருக்க முடியாவிட்டால், மேர்வின் சில்வாவையும் விரைவில் கொண்டுவந்து தா என யமனிடம் கூறு.
நானும், பாலிதவும் மட்டுமே மரணிப்பதற்கு முன்னரே கல்லறைகளை அமைத்துக்கொண்டவர்கள். நான் மயானத்தில் அமைத்தேன். இவர் வீட்டு தோட்டத்தில் அமைத்தார்.” – என்றார்.