16 நாட்களுக்குள் 4 கர்ப்பிணி பெண்கள் உட்பட 273 பேர் கொரோனாவால் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் மே முதலாம் திகதி முதல் 16 ஆம் திகதிவரை கொரோனாவால் நான்கு கர்ப்பிணி பெண்கள் உட்பட 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி மே முதலாம் திகதி 9 பேரும், 2 ஆம் திகதி 9 பேரும், 3 ஆம் திகதி 13 பேரும், 5 ஆம் திகதி 14 பேரும், 6 ஆம் திகதி 11 பேரும், 7 ஆம் திகதி 19 பேரும், 8 ஆம் திகதி 22 பேரும், 9 ஆம் திகதி 15 பேரும், 10 ஆம் திகதி 26 பேரும், 11 ஆம் திகதி 23 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

அத்துடன், மே 12 ஆம் திகதி 18 பேரும், 13 ஆம் திகதி 24 பேரும், 14 ஆம் திகதி 29 பேரும், 15 ஆம் திகதி 20 பேரும் , 16 ஆம் திகதி 21 பேரும் இவ்வாறு கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles