18ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்

கல்வி புரட்சிமூலம் மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உதயமான ‘மலையக கல்வி’ அபிவிருத்தி மன்றம் இன்று 18ஆவது அகவையில் காலடி வைக்கின்றது.

இதனை முன்னிட்டு இறையாசிவேண்டி இன்று காலை செட்டியார் தெரு ஶ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

மன்றத்தின் தலைவர், போஷகர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் என பலரும் பூஜையில் பங்கேற்கவுள்ளனர்.

2006 ஆகஸ்ட் 26 ஆம் திகதி உதயமான மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், இன்றளவிலும் மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அளப்பரிய சேவை ஆற்றிவருகின்றது. மன்றத்தின் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

 

 

Related Articles

Latest Articles