19 ஐ பாதுகாக்க மக்களை அணிதிரட்டும் ஐக்கிய மக்கள் சக்தி!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பல தியாகங்களுக்கு மத்தியிலேயே 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எனவே, குறித்த சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால் அதனை மாற்றியமைக்கலாம். மாறாக 19 ஐ முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமுடியாது. 19 ஐ பாதுகாப்பதற்காக மக்களை அணிதிரட்டி போராடுவோம்.

தகவல் அறியும் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன தொடரவேண்டும்.” – என்றும் ராஜித கூறினார்.

Related Articles

Latest Articles