அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றம் 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது முதலாம் வாசிப்புக்கென நிதி அமைச்சரால் மேற்படி சட்டமூலம் முன்வைக்கப்படும்.
அதன்பின்னர் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்துவதற்கு ஏழு நாட்கள் வழங்கப்படும். ஏதேனும் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறுவதற்கு மூன்று வாரங்கள் எடுக்கும்.
அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டமூலம் குழுநிலை விவாதத்தின்போதே திருத்தப்படவுள்ளது.