20 ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு – சபாநாயகர் அறிவிப்பு

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19 ஆம் திகதி , ஜனாதிபதி பதவிக்கு வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும், பின்னர் ஜூலை 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

விசேட கட்சி தலைவர்கள் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போதே சபாநாயகர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles