2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.
இதன்படி பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடம் 2020-07-22 முதல் 2020-08-31 திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இம்முறை அனைத்து விண்ணப்பதாரிகளும் இணைய வழி ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk பிரவேசித்து குறித்த அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்து இணையவழி ஊடாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.