இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் 27 வருடங்களுக்கு முன்னர் – 1994 ஆம் ஆண்டு – இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர், தான் உயிரோடிருப்பதாக உறுதிப்படுத்துவதற்கு மேற்கொண்ட நீண்ட சட்டப்போராட்டத்தில் வெற்றிபெற்று, தனது இருப்பை உறுதிசெய்திருக்கிறார்.
அரச ஆவணங்களின் பிரகாரம், தான் 1994 ஆம் ஆண்டுதான் பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், 2022 ஆம் ஆண்டு தனது 28 ஆவது வயதில் தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்டு, தனது இணையரை சட்டபூர்வமாக கைப்பிடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
குறிப்பிட்ட நபரது இரண்டு மகள்களும் ஒரு மகனும் திருமணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் – இருப்பவர்களை இறந்தவர்களாக ஆவணங்கள் தயாரித்து, அவர்களது சொத்துக்களை திருடும் பெரும் மோசடி பரவலாக இடம்பெற்றுவருவதாகவும், இதனை அம்பலப்படுத்தவேண்டும் என்பதற்கான கவனயீர்ப்பு நடவடிக்கையாக தான் இந்த மீள் திருமண அறிவிப்பை விடுத்திருப்பதாக அந்த நபர் கூறியிருக்கிறார்.