நாட்டில் நேற்று மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 9 கைதிகளும், அங்கு தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணிய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும். பிரித்தானியாவில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி இலங்கையில்கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் இதுவரையில் 2 ஆயிரத்து 94 பேர் குணமடைந்துள்ளனர்.659 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.