4 ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சு பதவிகளை வகித்துள்ள டக்ளஸ்

ஈ.பி.டிபியின் செயலாளரும், அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்தார்.

டக்ளஸ் தேவானந்தா ,1994 இல் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த பின்னர், 2000 ஆம் ஆண்டில் அவருக்கு முதன்முறையாக அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

அந்தவகையில் சந்திரிக்கா அம்மையார், மஹிந்த ராஜபக்ச , மைத்திரிபால சிறிசேன ( 52 நாட்கள் ஆட்சி) மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய ஜனாதிபதிகளின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

ரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம். ஜயரத்ன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய பிரதம அமைச்சர்களின் கீழும் செயற்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles