400 பைல்கள் மீள திறப்பு! கைதாகும்போது புலம்பாதீர்!!

400 கோப்புகள்வரை மூடப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, வழக்கு தொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்வர்களை நிச்சயம் பிடிப்போம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ கள்வர்களை பிடித்தீர்களா எனக் கேட்கின்றனர்? நிச்சயம் பிடிப்போம். அவ்வாறு பிடிக்கும்போது புலம்ப மட்டும் வேண்டாம் என கூறிவைக்க விரும்புகின்றேன்.

சுமார் 400 கோப்புகள்வரை உள்ளன. அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாம் பரிசீலித்தோம். சில கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இறுகியுள்ளன. மேலும் சில கோப்புகள் சிஐடியில் தேங்கியுள்ளன. இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் கோப்புகள் ஸ்தம்பித்துள்ளன. மேலும் சில விடயங்கள் இன்னமும் முறைப்பாடு மட்டத்தில் மட்டுமே உள்ளது.

அனைத்து கோப்புகளையும் மீள திறக்குமாறு (விசாரணை நடத்துமாறு) சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். அத்துடன், வழக்கு தொடுப்பதற்கு ஏற்புடைய வகையில் விசாரணையில் விவரங்களை திரட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சியின்போது ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, கண்காட்சியாகவே முன்னெடுக்கப்பட்டது. எமது ஆட்சியில் அவ்வாறு நடக்காது. உரிய வகையில் விசாரணை நடத்தப்படும். தரவுகள் உரிய வகையில் திறப்பட்டு, சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு தொடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles