நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆறு பேர் மாயமாகியுள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
களுகங்கை, நில்வளா கங்கா மற்றும் கிங் கங்கை ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்துவருகின்றது. இதனால் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அதேவேளை, அனர்த்தங்கள் இடம்பெறும் பகுதிகளை பார்வையிட செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.