48 மணிநேரத்துக்குள் 10 பேர் பலி: 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 10 பேர் பலியாகியுள்ளனர். ஆறு பேர் மாயமாகியுள்ளனர்.

மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் 36 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

களுகங்கை, நில்வளா கங்கா மற்றும் கிங் கங்கை ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்துவருகின்றது. இதனால் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அதேவேளை, அனர்த்தங்கள் இடம்பெறும் பகுதிகளை பார்வையிட செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles