பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி, பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர், சபாநாயகரிடம் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்தவாரம் இரு நாட்கள் மாத்திரமே நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
