9 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுமா? பிரதமர் – சபாநாயகர் அவசர சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி, பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர், சபாநாயகரிடம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்தவாரம் இரு நாட்கள் மாத்திரமே நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles