தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்திலுள்ள வீடொன்றுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று கிடப்பதாக தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுத்தையை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தையின் சடலம் மரண பரிசோதனைக்காக இரந்தனிகல வனவிலங்கு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தொழிலாளியை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 12 (12.03.2024) ஆம் திகதிசெவ்வாய் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் பிரபுதிகா லங்கான்தினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆ.ரமேஷ், தலவாக்கலை கேதீஸ்










