“ நாடு வங்குரோத்தியுள்ளவேளையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை மக்கள் ஆணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது , விவாதங்களும், வாதங்களும், தர்க்கங்களும், கலந்துரையாடல்களும் நடக்க வேண்டும். முன்மொழிவுகள், பார்வைகள் மற்றும் வேலைத்திட்டங்களை முன்வைக்காமல் அவ்வாறான வளங்களைப் பெற முடியாது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார்.
“ சர்வதேச சமூகத்தின் தலைவர்கள் சந்திக்கும் போது தனிப்பட்ட சந்திப்புகள் கூட நடக்கின்றன. மொழித்திறன் இல்லை என்றால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறான திறமை இல்லாதவர்களுக்கு நாட்டின் தலைமைத்துவத்தை வழங்குவது மீண்டும் பாதாளத்தில் விழுவதை போன்றதாகும்.” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவாதம் நடத்த தான் எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான விவாதங்களில் இருந்து தப்பி ஓட வேண்டாம் எனவும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் தனது பொருளாதார கொள்கை வகுப்பாக்க குழுவினரோடு மாற்று அணியின் பொருளாதார குழுக்களையும் ஒன்றிணைத்து விவாதம் நடத்துவோம் என நாகரீமகாக அழைக்கும் போது, கோழைகள் போன்று விவாதங்களில் இருந்து தப்பி ஓட வேண்டாம் என புரட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.










