நீர்கொழும்பில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீர் கொழும்பு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆறு மாணவர்கள் இன்று (14) காலை கடலுக்கு சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவரே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.