“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மக்கள் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக இருக்கிறோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதற்கான தெளிவான வேலை திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன. இது தொடர்பான விடயங்கள் பாராளுமன்றத்தில் கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.” எனவும் அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆசிகளை பெற்றுக் கொள்ளும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு ஆயர் இல்லத்திற்கு இன்று(18) விஜயம் செய்தார்.
பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அருட்திரு மெக்ஸ்வெல் சில்வா, அருட்திரு ஜே.டி. அந்தனி ஜயகொடி, அருட்திரு அன்டன் ரஞ்சித், அருட்திரு சிறில் காமினி மற்றும் அருட்திரு இந்திக ஜோய் ஆகியோரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
