ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம்!

பொதுத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதாலேயே விமல் வீரவன்ச போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார் என்பதே உண்மை. அதற்காக அவர் கூறும் காரணங்கள் எமக்கு முக்கியம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஆடத்தெரியாதவன் மேடைக் கோணல் எனக் காரணம் கூறுவதுபோல்தான், தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளவர்கள் தற்போது கதைகளைக் கூறிவருகின்றனர்.

மக்கள் தம்மை நிராகரித்துவிட்டனர் என்பது அவர்களுக்கு தெரியும். ஜனாதிபதி தேர்தலில் தாம் ஆதரவு வழங்கிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரு ஆசனம்கூட கிடைக்காது என்பது அவர்களுக்கு தெரியும். அதனால்தான் பின்வாங்கியுள்ளனர்.

தோல்வியால் ஒதுங்கும் அவர்கள், அதற்காக கூறும் காரணங்கள் எமக்கு முக்கியமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த அணியொன்றை களமிறங்கியுள்ளோம். அதற்கு மக்கள் நிச்சயம் ஆணை வழங்குவார்கள்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles