தேசியப் பட்டியல் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான்கு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்குரிய உறுப்பினர்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பங்காளிக்கட்சிகள் உள்ளன. எமது உறுப்பினர்களும் உள்ளனர். எனவே, பேச்சுகள் தொடர்கின்றன.
கட்சிகளின் கருத்துகள் பெறப்படுகின்றன. அந்தவகையில் விரைவில் தீர்வு எட்டப்படும். விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால் அது கட்சிக்கே பாதகமாக அமையக்கூடும்.” – எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.










