இன்று மாத்திரம் 703 பேருக்கு கொரோனா! இருவர் உயிரிழப்பு!!

நாட்டில் மேலும் 377 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 703 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 25 ஆயிரத்து 25  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles