மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவும், பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது நீதி அமைச்சரால் மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், முழுமையான அறிக்கை ஒரு மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் கூறினார்.










