கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து எனக் கூறப்படும் பாணி மருந்து இன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மருந்து தொடர்பிலான மூன்றாம் கட்ட ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
கேகாலை பகுதியிலுள்ள ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டாரவே இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளார்.
இந்நிலையிலேயே அம்மருந்து இன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டது. சபாநாயகரின் அலுவலகம் வந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களும் குறிந்த ஆயுர்வேத பாணி மருந்தை பருகினர்.












