அதிகாரப்பகிர்வுக்கு அழுத்தம் கொடுங்கள்: ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை

“ பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல், மனித உரிமைகளைப் பேணுதல், நல்லாட்சியை முன்னெடுத்தல், நல்லிணக்கத்தை உருவாக்குதல் போன்ற விடயங்களில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை நிறைவேற்றும் கடப்பாட்டில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறிழைக்குமானால் அதற்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொள்ளலாம்.”

– இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்புக் குழுவிடம் நேரடியாகவும் பட்டவர்த்தனமாகவும் தெரிவித்திருக்கின் றது இலங்கைத் தமிழரசுக் கட்சி.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட கண்காணிப்புக் குழுவுக்கு இடையில் நேற்று இரவு 8 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரம் நடை பெற்ற சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான இந்தக் குழுவில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றஉறுப்பினர்களான இரா.சாணக்கியன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட கண் காணிப்புக் குழுவில் அதன் உறுப்பினர்கள் ஐவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவரும், பிரதித் தூதுவரும் நேற்றைய சந்திப்பில் பங்குபற்றினர்.
இலங்கைக்குத் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வரும்விசேட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த ஆண்டில் முடிவடைய இருக்கும ;சூழலில், அதை நீடிப்பதா என்பது குறித்துஆராயவே ஐரோப்பிய ஒன்றியக் குழு கொழும்பு வந்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், இணையப் பாதுகாப்பு சட்டத்தை சீராக்குதல், நல்லாட்சி முறையைப் பேணு தல், பொறுப்புக்கூறலை நடைமுறைப் படுத்துதல், நியாயமான அதிகாரப் பகிர்வை முன்னெடுக்கும் விதத்திலான அரசமைப்பை உருவாக்குதல் என்பவை தொடர்பாக இலங்கை சர்வதேச சமூகத் துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறை வேற்றாதமை குறித்து இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டினர்.

“இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில், பொருளாதார ரீதியில் நாட்டை மேம்படுத்தும் நோக்கில் நாட்டுக்கானவரிச் சலுகைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வந்தோம்.

அந்த வரிச்சலுகைகளை இலங்கை அரசுகள் பெற்றுக்கொண்ட போதிலும், கடைசியில் நாட்டைப் பொருளாதார வங்குரோத்திலேயே கொண்டு போய் நிறுத்தியுள்ளன.

மறுபுறத்தில் இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைக ளையும் அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து இவ்வாறு அரசு முறையற்ற விதத்தில் – பொறுப்பற்றுச் செயற் படும்போது வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குங்கள் என்று நாம் கோருவது நியாயமற்றது.” – என மேற்படி சந்திப்பின்போது சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஆட்சிப் பீடம் உங்களிடம் உதவி பெற்றுக்கொண்டு, மறுபக்கத்தில் நீதி செய்ய வேண்டிய தமிழர்களுக்கு அதைச் செய்ய மறுக்கின்றது. ஒரு புறம் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை வருமானத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மறு புறம் தமிழ் மக்களின் தாயக பூமியை கபளீகரம் செய்யும் வேலைகளை முனைப் பாக முன்னெடுக்கின்றது.

காணி பறிப்பைத் திட்டமிட்டு முன்னெடுக்கும் அநீதியை இழைக்கின்றது. அதிகாரப் பகிர்வை முன்னெடுக்க மறுக்கின்றது. பொறுப்புக்கூறலை நிலைநாட்டப் பின்னடிக்கின றது. நீதியையும், நல்லாட்சியையும், மனித உரிமைகளையும் நிலைநாட்டும் தனது கடப்பாட்டை இலங்கை நிறைவு செய்வதற்கான நிபந்தனைகளைக் காலம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கவேண்டும்.

அந்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறினால் வரிச் சலுகையை விலக்கிக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட் சேபனையும் இல்லை. அப்படியான நடவ டிக்கையை நாங்கள் வரவேற்போம்.” – என்று சுமந்திரன் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழருக்கு நீதி வழங்கப்பட வேண்டும், அதிகாரம் முறையான விதத்தில் பகிரப் பட வேண்டும் என்பவை தொடர்பில் இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்குமாறு இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தமிழரசுக் கட்சியினர் வலியுறுத்தினர் என்றும் தெரிகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles