இராணுவம் விட்டுவிலகும் இடங்களை அபகரிக்கும் வனவளத்திணைக்களம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப்பிரிவிலுள்ள ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளம் என்பவற்றை இராணுவம் விடுவித்துள்ளன. அவற்றை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஓட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
‘ குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர்.

இத்தகைய சூழலிலேயே குறித்த பகுதியை வனவளத் திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்தச்செயற்பாட்டை தடுத்து நிறுத்தி குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாயப் பயன்பாட்டுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles