பிரிக்ஸ் அமைப்பை குறிவைக்கும் ட்ரம்ப்: சீனா கொதிப்பு!

 

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் கூடுதல் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்,
“வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது என்று சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது.” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நிங், “அதிகளவு வரிகளை விதிப்பது யாருக்கும் பலனளிக்காது” என்று கூறினார்.

முன்னதாக, பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10மூ வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
அவர், “பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கை மீது கவனம் செலுத்துவோர்க்கு நன்றி.” என்று பதிவிட்டிருந்தார்.

இருப்பினும், எந்த மாதிரியான செயல்களை ஃ முடிவுகளை அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்று கருதுகிறார் என ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை என்று சீனா பதிலளித்துள்ளது கவனம் பெறுகிறது.

Related Articles

Latest Articles